நேபாளத்தில் பாசிசமயமாகும் ஜென் ஜி இயக்க ஆட்சி!

நேபாளத்தில் மைய நீரோட்ட கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு மாவோயிஸ்ட் கட்சி மற்றும் ஏனைய மைய நீரோட்டக் கட்சிகளுடைய ஆட்சிகளின் மீதான அதிருப்தியால் விளைந்த ஜென் ஜி(Gen z) எழுச்சியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த தனது வர்க்க புத்தியை காட்டும் விதமாக

கல்வி நிறுவன கட்சிசார் மாணவர் பேரவைகளை மட்டுமன்றி அரசு அலுவலர் இடையேயான கட்சிசார் தொழிற்சங்கங்கள் அமைக்கப்படுவதையும் தடை செய்வதாக ஜென் ஜி இயக்க ஆட்சி அறிவித்துள்ளது.

நேபாளத்தில் ஜனநாயகம் தோன்றுவதற்கோ நிலவும் ஜனநாயகத்தையாவது காப்பாற்றுவதற்கு பெரிதும் பங்காற்றாத ஜென் ஜி இயக்கம் தான் அண்மையில் அங்கு ஆட்சிக்கு வந்துள்ளது.

‘அரசியல் அகற்றப்பட்ட அரசியலை'(depoliticised politics) அரசியல் கொள்கையாக உடைய ஜென் ஜி-யின் ஆட்சியில் இதுதான் நடக்கும்.

இத்தகைய ஆட்சிகளுக்கு அரசியல்மயமான அரசியலை கண்டுதான் அச்சம் அதிகம். அதற்கு ஊழல் எதிர்ப்பு பூச்சாண்டி அரசியலை திரையாக பயன்படுத்தும். ஊழலுக்கு காரணமான உலகமயமாக்கலை பற்றி குறைந்தபட்சமாகவேனும் பேசாது.

நேபாளத்தின் இப்போதைய பிரதமர் பாலேந்திரா பிறப்பதற்கு முன்பேயே ஜனநாயகம் கோரிய வெற்றிகரமான மாணவர் போராட்டம் நடந்ததுதான் அதன் வரலாறு.

அப்போராட்டம் போட்ட பிச்சையில்தான் இன்றைய பிரதமர் பிரதமராக முடிந்தது.

நேபாள மாணவர்கள் ஜென் ஜி‌ கட்சியிடமிருந்து ஆட்சியை பறிப்பார்கள் என்பது உறுதி.

-பாஸ்கர்(அரசியல் செயற்பாட்டாளர்)

பின்னூட்டமொன்றை இடுக