சாத்தான்குளம் காவல் சித்திரவதை படுகொலை தீர்ப்பில் நாமெல்லாம் ஆழ்ந்திருந்த நேரத்தில்.
ஒரு முஸ்லிம் இளைஞரை அடித்து படுகொலை செய்து தீயிட்டு கொளுத்திய வழக்கில் 13 காவலர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர் மசூது (வயது46), கடந்த 2006-ம் ஆண்டு ஆரல்வாய்மொழி போலீசாரால் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்படுகிறார்.
காவல்துறையின் விசாரணையின்போது அவர் காவல் படுகொலை செய்யப்படுகிறார், கொல்லப்பட்ட மசூதின் சடலத்தை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உடலை தீயிட்டு கொளுத்தி சாட்சியத்தை அழித்து விடுகின்றனர் காவலர்கள்.
கணவரைக் காணவில்லை என காவல் படுகொலை செய்யப்பட்ட மசூதின் மனைவி அசனம்மாள் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததை அடுத்து, அவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்படுகிறது.
விசாரணையில் மசூது உயிருடன் இல்லை என்பது உறுதியாகிறது.
இதையடுத்து, 13 போலீஸ் அதிகாரிகள் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப் பட்ட போலீஸ் அதிகாரிகளாக இருக்கும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரதாப்சிங், சென்னை அண்ணா நகரில் துணை கமிஷனராக இருக்கும் ஈஸ்வரன், துணை சூப்பிரண்டு சந்திரபால், இன்ஸ்பெக்டர்க்டர் லட்சுமணராஜ், சப்–இன்ஸ்பெக்டர் சத்யராஜ், தலைமைக்காவலர் ரத்தினசாமி, போலீஸ்காரர்கள் பாஸ்கரன், மைக்கேல், முத்து, ஸ்டீபன், முருகன், மாடசாமி, பரமசிவன் ஆகிய 13 போலீஸ்காரர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கு போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தால் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.
சாத்தான்குளத்தில் காவல் படுகொலை செய்யப்பட்ட பி.ஜெயராஜ்,
ஜே. பென்னிக்ஸ் இருவரும் நாடார் கிறிஸ்தவர்களாக இல்லாமல் முஸ்லிம் பெயரை கொண்டவராக இருந்திருந்தால் அந்த ஒன்பது காவலர்களும் கூட இன்று விடுவிக்கப்பட்டிருப்பார்கள்.
தமிழ்நாடு அரசு உடனடியாக மசூத் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
அரசும் நீதிமன்றங்களும் காவல் நிலையங்களும் தான் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்றால் இந்த ஊடகங்கள் கூட ஏன் இவ்வளவு பாரபட்சம் காட்டுகிறது செய்தியை வெளியிடுவதற்கு…?
சாத்தான்குளம் தீர்ப்பை நிமிடத்திற்கு நிமிடம் பிரேக்கிங் செய்தியா வெளியிட்ட ஊடகங்கள் மசூத் கொலை குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை பெட்டிச் செய்தியாக தான் வெளியிட்டு இருக்கிறது.
என்னமோ நாமெல்லாம் மசூத் காவல் படுகொலைக்கு நீதி கேட்டு உடனே ரோட்டில் இறங்கி விடுவோம் என்பதைப் போல…!
-ம. முகமது கவுஸ்

பின்னூட்டமொன்றை இடுக